tamilnadu

img

பொன்மாணிக்க வேலுக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

சென்னை,ஆக. 30 - சிலை கடத்தல்  வழக்கில் முன் னாள் ஐ.ஜி பொன் மாணிக்க வேலுக்கு உயர் நீதிமன்ற மது ரைக் கிளை நிபந்த னையுடன் முன்ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கர வர்த்தி முன்பு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, “மனுதாரர் மீதான வழக்கு, ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையில் பதி வாகியுள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது.