tamilnadu

img

மோடியின் வெறுப்பு அரசியல் பேச்சை கண்டித்து ...

பிரதமர் மோடியின் வெறுப்பு அரசியல் பேச்சை கண்டித்தும், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், விசிக பொறுப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் நசீர் பகுதிச் செயலாளர் சாகுல் அமீது, சிபிஎம் நிர்வாகிகள் மூர்த்தி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.