tamilnadu

img

தோழர் ஏ.பி. விஸ்வநாதன் மறைவு: சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட நேரடி கட்சிக் கிளை உறுப்பினரும், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகியின் கணவருமான தோழர் ஏ.பி. விஸ்வநாதன் திங்களன்று (ஆக.24) சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், அ. சவுந்தரராசன், சுதா சுந்தர்ராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ. சண்முகம், க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி. சுகுமாறன், பா. ஜான்சிராணி, க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், ஏ.ஆறுமுகநயினார், க.உதயகுமார், வெ. ராஜசேகரன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத் தில் பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சிப் பணி, தொழிற்சங்க பணி என்று ஒருசேர கவனித்து வந்த விஸ்வநாதன், 2000ம் ஆண்டு பணி ஓய்வுக்கு பிறகு பண்பாட்டுத்தளத்தில் செயலாற்றினார். பல வகைகளில் கட்சிக்கு உதவி புரிந்தார். வாசுகியின் அரசியல் பணிக்கு உறுதுணையாக இருந்தார். சிந்தனையாளர், ஆங்கில புலமைமிக்கவர், திறம்பட மொழிபெயர்க்கும் ஆற்றலாளர் என பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டிருந்தவர் என்று புகழாரம் சூட்டினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.தோழர் விஸ்வநாதன் மறைவுக்கு கட்சி நிர்வாகிகளும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகளும் தோழர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;