சென்னை.மே 19-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள மெட்டல் பாக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க கமிட்டி உறுப்பினராகவும் இருந்த தோழர் கே. மணி ஞாயிறன்று (மே 19) உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 72.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் உறுதியான பிடிப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் நேர்மையும் கொண்ட அவரது பணி காலத்தால் அழிக்க முடியாது என்று மெட்டல் பாக்ஸ் ஆலை தொழிற்சங்க செயலாளர் வி.கோபால் அனுதாபத்துடன் தெரிவித்தார். தோழர் மணிக்கு சந்திரா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளார்.அன்னாரது உடல் புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்பன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் சுந்தரராஜன்,கூறுகையில் தோழர் மணி ஆர்கே நகர் பகுதி குழு உறுப்பினராக இருந்தபோது புதுவண்னை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார் என்றார். தீக்கதிர் அலுவலகத்தின்பாதுகாவலராக ஆறு ஆண்டுகளாக தோழர் மணி சிறப்பாக பணி புரிந்தார் என்றும் அவரதுஇழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் சென்னைப் பதிப்பு பொது மேலாளர் சி.கல்யாணசுந்தரம் கூறினார். சிபிஎம் ஆர் கே நகர் பகுதி செயலாளர் தீபா.39 ஆவது வட்ட கிளை செயலாளர் டி. ஜெயன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் காசிமேடுமயானத்தில் ஞாயிறன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தோழர் மணி மறைவிற்கு தீக்கதிர் ஊழியர்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளனர்.