என்ன சீனியர்... இவ்வளவு நேரத்துலயே வந்துட்டீங்க.. உங்களப் பாக்கனும்தான்... நேத்து நாம பேசிட்டுருந்தத நிறைவு செய்யனும்னு நெனச்சேன். சூப்பர், சீனியர்.. நானும் அந்த C பத்தி இன்னிக்குப் பேசனும்னு இருந்தேன்.. ஆனா, அதுக்கு முன்னாடி ஒண்ணு கேக்கனும்.
என்ன அது..? நாம பேசிட்டு இருந்தப்ப, எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு ஒரே மாசத்துல வேல கிடைச்சுதுன்னு சொன்னவுடன, நீங்க தபால் அலுவலக வேலை பத்தி தெளிவுபடுத்துனீங்க.. ஆமா... அதுல வேற ஏதாவது சந்தேகம் இருக்கா..? இல்ல சீனியர்... அந்த வேலைய விடுங்க... இப்போ நாம முயற்சி பண்றோம்ல... ஒரே மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டு இந்த மாதிரித் தேர்வு எழுதி வேலைக்குப் போயிர முடியுமா..? நாம இது பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம்... இருந்தாலும் மறுபடியும் நினைவுபடுத்துறேன்..
ஒரே மாசத்துல வேலை கிடைச்சுர முடியும்.. என்ன சீனியர், அதிர்ச்சி வைத்தியம் குடுக்குறீங்க.. சரி, உங்கள நான் ஒண்ணு கேக்குறேன்... தேர்வுக்கு தயாராகுறீங்கள்ல.. இப்போ படிக்குறதுல எத நீங்க புதுசாப் படிக்குறீங்க.. அதாவது, பள்ளிக்கூடத்துல படிக்காதது எது? அப்படிலாம் எதுவுமில்ல..
எல்லாமே பள்ளிக்கூடத்துல படிச்சதுதான்.. நடப்பு நிகழ்வு மட்டும்தான் புதுசு.. அது புதுசாத்தான இருக்க முடியும்.. அதேதான்.. பள்ளிக்கூடத்துல படிச்சது எதையுமே மறக்காம இருக்குற ஒருத்தரால நேராகத் தேர்வு மையத்துக்குப் போய் எழுதிப் பாஸ் பண்ணிர முடியும்தானே... தொடர்ச்சியா செய்தித்தாளும் படிச்சுருந்துருக்கனும்.. நம்ம மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் இருக்காருல்ல... அவரு தன்னோட முதல் தேர்வுலயே ஜெயிச்சு ஐஏஎஸ் ஆயிட்டாரு.. அது எப்புடி..? படிக்குறப்பயே பயிற்சி மையத்துக்குப் போயிட்டாரா...? இல்ல..
அவரு ஆறாம் வகுப்பு படிக்குறப்ப இருந்து செய்தித்தாள் வாசிக்குற பழக்கம் இருந்துச்சாம்.. செய்தித்தாள்னா வெறும் நடப்பு நிகழ்வுகள் மட்டுமில்ல... பல பொது அறிவுப் பாடங்களுக்கான குறிப்புகளும் அதுல கிடைக்கும்.. அப்போ நீங்க சொன்ன U, P, S எல்லாம் அவங்களுக்கு பள்ளிக்கூடத்துலயே தயாராயிடுச்சு...
இங்க வந்து C மட்டும்தான்.. சரி, சீனியர்.. இப்போ Cக்கு வாங்க.. அப்படின்னா என்ன Confirmationஆ..? இல்ல தம்பி.. Cனா Clinch... வெற்றிய உறுதிப்படுத்துறது.. அதுக்கு முன்னாடி உங்க கேள்விக்கு நேரடியான பதிலயும் குடுத்துர்றேன்... ஒரே மாசத்துல தயாராகி தேர்வுல ஜெயிச்சவங்களும் இருக்காங்க.. இப்போ Cக்கு வர்றேன்... புரிஞ்சுக்கிட்டீங்க முதல்ல.. அப்புறமா தயாரிப்பத் தொடங்குனீங்க.. உங்களப் பலப்படுத்திக்கிட்டீங்க... இப்போ வெற்றிங்குறத உறுதிப்படுத்திக்கப் போறீங்க.. எப்படி உறுதிப்படுத்திக்குறது..? இதுல மாதிரித் தேர்வுகள்ல இருந்து தேர்வு மையத்துக்கு நேரத்துக்துப் போறது வரைக்கும் இருக்கு.. மாதிரித் தேர்வுகள் நமக்கு என்ன செய்யும்..? திருப்புதலுக்கு உதவும்னு தெரியும்.. வேற என்ன கிடைக்கும்..? நிறைய கிடைக்கும்..
நம்மளால குறித்த நேரத்துல அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத முடியுமானு தெரிஞ்சுக்கலாம்.. எழுத்துத் தேர்வா இருந்தா, விடைகளைக் குறிக்குறதுல துல்லியமா இருக்கோமானு தெரியும்.. எதுல பலம், எதுல பலவீனம்னு தெரிஞ்சுக்க முடியும்... இப்படி நிறைய இருக்கு.. ஆமாம்ல... எவ்வளவு எழுதுறோமோ அந்த அளவுக்கு பயமும் குறைஞ்சுரும்ல.. அது அவ்வளவு உறுதியில்ல... உண்மையான தேர்வு எழுதுற அனுபவம் மாதிரி வராது.. அந்தத் தேர்வு மையத்துக்குள்ள நுழைஞ்சதுலருந்து பதட்டம் வந்துரும்.. இதெல்லாம் சகஜம்... எத்தனைத் தேர்வு எழுதுனாலும் பதட்டம் இருக்கும்...
பதட்டத்தை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்குறோமாங்குறதுதான் முக்கியம்.. ஓ... எனக்கு அனுபவம் வர்றப்ப தெரியும்னு நெனக்கிறேன்.. துல்லியமா இருக்குறது பத்தி சொன்னீங்க... அதுல என்ன இருக்கு.. விடை தெரிஞ்சா சரியாப் போட்டுடப் போறோம்.. அப்படியில்ல.. எந்த வினாவுக்கு விடை போடப் போறோமோ, அதுக்கு எதிரா அதைக் குறிக்குறோமாங்குறது முக்கியம்.. எடுத்துக்காட்டா, நாம ஆறாவது வினாவப் படிக்குறோம்.. விடை தெரியும்.. குறிக்கையில் சரியான இடத்தில் குறிக்க வேண்டும்.. தெரியாம விடை அளிக்காத ஐந்தாவது வினாவுக்கான இடத்துல குறிச்சுட்டா அதற்கு அப்புறம் குறிக்கும் பல வினாக்களுக்குத் தவறாகக் குறிச்சுருவோம். ஆமா.. நானே ஒரு தடவை இப்படித் தவறாக் குறிச்சேன்... கிட்டத்தட்ட 9, 10 விடைகளத் தவறான இடத்துல குறிச்சுட்டேன்.. அப்புறமா மாத்த முடியல...
இது ரொம்ப முக்கியம்தான்.. வினாத்தாளோட வரிசை எண் போடுறது கூட நெறயப் பேர் தப்பு பண்றாங்க... வாங்குற மார்க்கும் குறைஞ்சுரும்.. டி.என்.பி.எஸ்.சிலலாம் மைனஸ் மார்க் கிடையாதே..? தவறான விடைகளுக்குக் கிடையாதுதான்... ஆனால் வினாத்தாள் நம்முடையதான்னு பாத்து வாங்கனும்.. நம்முடைய விபரங்களோட அந்த வினாத்தாள் இருக்கும்.. அதை விட்டுவிட்டு வேறு விடைத்தாளை வாங்கி, அதுல நம்ம பதிவு எண்ணை எழுதி வெச்சா மொத்த மதிப்பெண்ல இரண்டு மதிப்பெண்ணக் கழிச்சுருவாங்க..
விடைகளைக் குறிக்குறதுல சரியான முறையைப் பின்பற்றலேனா இரண்டு மதிப்பெண் போயிரும்.. விடையைத் தேர்வு செய்யாம காலியா விட்டா அதுக்கு ரெண்டு மார்க் கழிஞ்சுரும்.. வினாத்தொகுப்பு புத்தக எண்ணை சரியாக் குறிப்பிடாமலோ அல்லது விடைத்தாள்ல அதுக்கான இடத்துல சரியா எழுதாமலோ இருந்தா அஞ்சு மதிப்பெண் போயிரும்..
கைரேகை வைக்க வேண்டிய இடத்துல வெக்கலேன்னா, அதுக்கு ரெண்டு மார்க்க கழிச்சுருவாங்க.. அடேங்கப்பா... எல்லாம் படிச்சுட்டுப் போனாலும் இவ்வளவு கவனமா இருக்கனுமே..? இது மட்டுமில்ல.. உறுதிப்படுத்துறதுல இன்னும் நிறைய இருக்கு... தேர்வு மையம் எங்க இருக்கு... எப்படிப் போகனும்..
குறித்த நேரத்துக்குப் போகனும்... இதெல்லாம் தாண்டி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கைல இருக்கனும்... சில பேரு அதக்கூடக் கொண்டு வராம இருந்துருவாங்க. சில பேரு நேரத்துக்கு வராம வாசல் கேட்டுல நின்னு அத உலுக்கிட்டு இருப்பாங்க.. ஆமா... போன தேர்வுல முடிச்சுட்டு வெளியில வர்றப்ப உள்ளேயே வர முடியாம வெளில நின்ன சில பேரப் பாத்தேன்... பஸ் கிடைக்கல, பஸ் லேட்டு, வண்டி நின்னு போச்சுனு காரணம் சொல்லிட்டு இருந்தாங்க.. இதுக்கெல்லாம் தேர்வ நடத்துறவங்க ஒண்ணும் பண்ண முடியாதே.. நாமதான கவனமா இருக்கனும்..
தொடக்கத்துல இருந்து வகுப்புக்கு குறிச்ச நேரத்துக்கு வர்றது, மாதிரித் தேர்வுகள்ல தவறாமக் கலந்துக்குறதுனு இருக்குறவங்க பெரும்பாலும் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே போயிருவாங்க.. நேரத்துக்குப் போறத பழக்கமாவே மாத்திக்கனும்.. அவ்வளவுதான்... ஆமா சீனியர்... நம்ம வகுப்புக்கும் இன்னும் நாலு நிமிஷம்தான் இருக்கு.. வாங்க, போயிரலாம்..