tamilnadu

முதல்வரின் 5 அறிவிப்புக்குஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு....

சென்னை:
தென்சென்னையில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் ரூ. 70 கோடியில் நவீன நூலகம் உள்ளிட்ட முதலமைச்சரின் 5 அறிவிப்புகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் முக்கியமானவைகள்.கலைஞரின் நினைவாக மதுரையில் நவீன நூலகம், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ விருது, சாகித்திய அகாடமி மற்றும் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத் தாளர்களுக்கு அரசு வீடுகள் வழங்கும் திட்டம்.சென்னை கிண்டி கிங் ஆய்வு மைய வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுதல், திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் டன் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சூரிய மின் ஆற்றல் வசதி கொண்ட உலர் களங்கள், நகரப் பேருந்துகளில் உழைக் கும் பெண்களுக்கு அறிவித்த இலவச பயணத்தை திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்துதல்  போன்ற அனைத்தும் சமூக முன்னேற்றத் திற்கு பயனுள்ள பங்களிப்பாகும்.குறிப்பாக படைப்புலகில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும், புதிய  படைப்புகளை  உருவாக்கும். கலைஞர் பிறந்த நாளில் முதலமைச்சர் அறிவித்த திட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

;