tamilnadu

img

தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம்

விடுதலைப்போராட்ட வீரரும்,கைத்தறி சங்க ஸ்தாபகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மறைந்த தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் காஞ்சிபுரம் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.தோழர் கே.எஸ்.பி. திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மூத்த தோழர் வாசுதேவன், நகரச் செயலாளர் சி.சங்கர், கே. ஜீவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.