tamilnadu

img

கல்லூரிகள் ஆய்வுக் கட்டணம் திருவள்ளுவர் பல்கலை. சுற்றறிக்கைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 15- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், கடந்த ஜனவரி 24 அன்று, தன்னிடம் இணைப்பு பெற்ற கல்லூரி களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘வரு டாந்திர ஆய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆய்வு கட்டணமாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லூரிகள் 2020-21-ம் கல்வியாண்டு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத் தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணிராஜ் உள்பட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை  நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.அப்போது, பல்கலைக்கழ கத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தர விட்டார். வழக்கிற்கு 6 வாரத்துக்குள் பதில் அளிக்க திருவள்ளு வர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

;