மத கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் மத கருத்துகளைப் புகுத்தும் விதத்தில் கல்லூரி நிர்வாகம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் “இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்” என மாணவிகளுக்குப் பேராசிரியர் மிரட்டல் விடும் செல்போன் உரையாடலும் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் மீனாட்சி கல்லூரி நிர்வாகத்தின் மதவாத போக்கைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் தௌ.சம்சீர் அகமது தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல்துறையினர் அராஜகமான முறையில் அடித்து கைது செய்தனர்.