tamilnadu

img

மாட்டு வண்டியில் ஆட்சியர்

விழுப்புரம்.ஜன.17- விழுப்புரம் மாவட்ட மக்கள் தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினர். மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில்  நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மாட்டு வண்டியில் வலம் வந்தார். முன்னதாக, மாவட்ட சுற்றுலா அலுவலர் சின்னசாமி வரவேற்றார். இதையடுத்து நடைபெற்ற உரியடி திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரி அடித்தார். கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினர். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, திண்டிவனம் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானவேல், சீனுவாசன் மற்றும் தேவராஜன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;