சென்னை, நவ.30- தமிழ்நாட்டில் தொடர் மழை - புயலால் பாதிக் கப்பட்டுள்ள கட லோர மாவட்டங்க ளில் மீட்புப் பணி களைத் துரிதப் படுத்துவதுடன், முதற்கட்ட நிவார ணத்தையும் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புயலால் அதிகரித்த பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்க ளாகவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல், வெள்ளப் பாதிப்புகளை மேலும் அதிக ரித்துள்ளது. எனவே, தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை வேகப் படுத்த வேண்டும்.
குறுவை 80% பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தின் முத்துப் பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகு திகளில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறு வைச் சாகுபடி பெருமளவு பாதித்துள்ளது. சில இடங்களில் 80 சதவிகிதம் வரை பாதிப்பு இருக்கிறது. இதனால் விவசாயி கள் கடும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயி லாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங் கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்க ளிலும் இதே போல விவசாயம் பாதித் துள்ளது.
வருவாய் இழந்த மீனவர்கள்
மீனவர்கள், புயல் காரணமாக வலை கள் அறுந்தும், படகுகள் சேதமாகியும் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். வீடுகள், உடைமைகளை இழந்திருப்ப துடன், வருமான வாய்ப்புகளும் அற்றுப் போயுள்ளனர்.
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தங்கள் குடிசைகளிலும், காரை வீடுகளி லும், தொகுப்பு வீடுகளிலும் நீர் புகுந்த தால், உடைமைகளை இழந்தும் வீடு கள் பழுதாகியும் இழப்புக்களைச் சந்தித் துள்ளனர். தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளதும், அவை பலவீன மாக உள்ளதும் பாதிப்பை அதிகப் படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் சுனாமி பாதிப்பை ஒட்டிக் கட்டித்தரப் பட்ட வீடுகளும் இந்த தொடர் மழையால் சேதமாகியுள்ளன. பல நிவாரண முகாம் களில் ஒரு வாரத்துக்கும் கூடுதலாக மக் கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட நிவாரணம்
பாதிப்பு கடுமையாக உள்ள நிலை யில், நிவாரண முகாம்களில் தங்க வைக் கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முதற்கட்ட நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தண்ணீர் புகுந்த ஒவ்வொரு வீட்டுக் கும் ரூ. 10 ஆயிரம், வேலை, வருமானம் இழந்திருக்கும் குடும்பங்களுக்கு நிவார ணம், உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். மீனவர்களின் வருமான இழப் பும், வாழ்வாதார கருவிகளின் சேதமும் உடனடியாக கணக்கிடப்பட்டு விரைவான உதவி மேற்கொள்ளப்பட வேண்டும். விவ சாய நிலம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், விரைவாக வழங் கிட வேண்டும். தொகுப்பு வீடுகளையும் விரைந்து கட்டித்தர வேண்டும்.
கரம் கோர்ப்போம்
புயல், மழைவெள்ளப் பாதிப்பு ஏற்பட் டுள்ள அனைத்து பகுதிகளிலும் நிவாரண நடவடிக்கைகளில் கரம் கோர்க்க வேண்டு மென மாவட்டக் குழுக்களையும், கிளை களையும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மீட்பு தேவைப்படும் மக்க ளுக்கு உடனடியாக முடிந்த உதவிகளைச் செய்வதுடன், அரசின் உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று துயரத்தி லிருந்து மீண்டு வர உதவிட வேண்டும்.
ஒன்றிய அரசு உதவிடுக!
நீண்ட கடல் எல்லை கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ச்சியாக காலநிலை சார்ந்த பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் மோடி அரசாங்கம், இந்த பாதிப்புகள் மீது பாராமுகமாகவே இருப்பது கண்டனத்திற்கு உரியதாகும். இதனால் பேரிடர்களின் அனைத்து பொரு ளாதார சுமைகளையும், மறுகட்டமைப்பு பணிகளையும் மாநில அரசே ஏற்க வேண்டி யுள்ளது. எனவே, பேரிடர் நிவாரண நிதி யில் மாநில அரசின் பங்கை முழுமையாக தருவதுடன், ஒன்றிய அரசின் நிதியிலி ருந்து உதவிட வேண்டும் என்ற கோரிக்கை யை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறோம். 16-ஆவது நிதி ஆணையத்தின் முன் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, காலநிலை சார்ந்த அளவுகோலையும் நிதிப் பங்கீட்டில் இணைத்திட வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.