tamilnadu

img

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் திட்டம் - பின்வாங்கியது ஒன்றிய அரசு

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும்  ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த காலங்களில் ஒன்றிய அரசு திட்டமிட்டது அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டங்களை அறிவித்து, அப்பகுதியில் வேளாண் தொழில்களை பாழ்படுத்தும் வகையில் எந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது  தடை விதித்தது. 

இதைத்தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதை அடுத்து டெல்டா விவசாயிகளையும், பொதுமக்களும், சிபிஎம் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் பட்டியலிலிருந்து இந்த 3 இடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.