tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர்.  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில், கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி, நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க்.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.