ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம், அறிவுசார் மையம்!
திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.