tamilnadu

img

கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க அனுமதி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, ஜூலை 8- நீர்வளத்துறை மற்றும் ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துப் பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

இயற்கை வளங்கள் துறை யின் சார்பில், தலைமைச் செய லகத்தில், திங்களன்று (ஜூலை 8) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி ஆணை களை வழங்கி, திட்டத்தைத் துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக, இனிமேல் வட்டாட்சி யர்கள் மூலமே, பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகிய வற்றை கட்டணமின்றி எடுத்துச்  செல்லலாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன்  12 அன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை இயக்குநர் / உதவி இயக்குநர், வட்டாட்சி யர்கள், கிராம நிர்வாக அலு வலர்கள் மற்றும் ஏரி, குளம்  மற்றும் கண்மாய் பொறுப்பா ளர்களுக்கு 25.6.2024 அன்று இயற்கை வளங்கள் துறையால் வழிகாட்டும் நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர் களுக்கு அனுமதி ஆணை களை வழங்கி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டத்தினை திங்களன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன், தலை மைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர். ஜூலை 8 முதல் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய் வோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.