tamilnadu

நீதிபதி தேர்வில் குளறுபடியா?

சென்னை, நவ. 5- உரிமையியல் நீதிபதி காலிப் பணி யிடங்களை நிரப்ப முதன்மைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வினாத் தாளில் குளறுபடி இருந்ததாக சர்ச்சை எழுந்தது.  அது தொடர்பாக உடனடியாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் 2014 ஆம் ஆண்டு முதல் நிரப்பப்பட்டு வரு கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்தும் நிலையில், அதில்  உயர் நீதிமன்றமும் பங்களித்து வரு கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவ தும் 245 சிவில் நீதிபதி காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

நீதிபதி தேர்வை எழுதுவதற்காக 17,037 சட்டம் படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்க ளுக்கு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. 12,037 பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் அக்டோபர் 11ஆம் தேதி வெளியான நிலையில் தேர்வர்கள் பெற்ற மதிப் பெண் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட் டவற்றை பின்பற்றி 2,544 பேர் முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிவில் நீதி பதிக்கான முதன்மைத் தேர்வு  சனிக்கிழமை (நவ. 4) சென்னை யிலுள்ள 25 மையங்களில் நடைபெற் றன. சனிக்கிழமை காலை மொழி பெயர்ப்பு முதல் தாளும், மதியம் சட்டம் முதல் தாளுக்குமான தேர்வுகள் நடை பெற்றது. 18 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் 2,526 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் சட்டம் இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் ஞாயிறன்று (நவ. 5) காலை தொடங்கியது. வட சென்னை மையத்தில் வினாத்தாளை வாங்கி பிரித்துப் பார்த்த தேர்வர்கள், சட்டம் மூன்றாம் தாளுக்கான வினாக் கள், சட்டம் இரண்டாம் தாளில் கேட்கப் பட்டுள்ளதாக தேர்வு மேற்பார்வை யாளர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனால் தேர்வறையில் குழப்பம் நில வியது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலை யில், டிஎன்பிஎஸ்சி சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கும் அறிவுறுத்தல்கள் படிதான், உரிமையியல் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. உயர் நீதி மன்றம் கேள்வித் தாள்களை தயாரித்து எங்களிடம் கொடுத்தனர். நாங்கள் அதை தேர்வர்களுக்கு விநியோகம் செய்தோம். இதில் டிஎன்பிஎஸ்சி தவறு எதுவும் இல்லை. எனினும் தேர்வர்களின் புகார் பற்றி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தக வல் தெரிவிக்கப்பட்டது. வினாத்தாளில் குளறுபடி இல்லை என பதிவாளர் தெரி வித்ததோடு தொடர்ந்து தேர்வை நடத்த லாம் என்று கூறினார் என்று விளக்கம் அளித்துள்ளது.