கள்ளக்குறிச்சி மாவட்டம் பிள்ளையார்குப்பத்தில் மாவட்டச் செயலாளர் இ.அலமேலு தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் மாவட்டத் தலைவர் ஏ.தேவி தலைமையிலும், நடராஜன் நகரில் நகரச் செயலாளர் வி.சந்திரா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெரசா நகர் உள்ளிட்ட 25 இடங்களில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்பேத்கர் தெருவில் கிளைச் செயலாளர் ஜெயந்தி தலைமையிலும், மிடுகரப்பள்ளியில் கிளைச் செயலாளர் மஞ்சுளா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.