தூய்மை பணியாளருக்கு கையுறை, முகக்கவசம் கிரிமிநாசினி, சோப்பு போன்றவற்றை வழங்க வேண்டும், கைவண்டி, ட்ரைசைக்கிள்களை பழுதுபார்த்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஆக.20) பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.பழனி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க துணைத்தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.