districts

img

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 7- திருவள்ளூர் அருகில் உள்ள மப்பேடு பகுதிக்கு உட்பட்ட சத்தரை கிராமத்தில் கார்  உதிரி பாகங்கள் தயாரிக்கும் எஸ்எப்ஸி  சொல்யூஷன்ஸ் சீலிங் என்ற தனியார் நிறு வனம் உள்ளது. இங்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த 50 நிரந்தர தொழிலாளர்களும், உள்ளூரை சேர்ந்த 300 ஒப்பந்த தொழிலா ளர்களும் வேலை செய்கின்றனர்.  இந்நிலை யில் ஊதிய உயர்வு, கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்துள்ளனர். இதனை ஏற்காத நிர்வாகம் கடந்த ஆண்டு  அக்டோபர் 14ஆம் தேதி 9 நிரந்தர தொழிலா ளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது சட்ட  விரோதமான நடவடிக்கை என்றும், தவறு செய்யாத தொழிலாளர்களை மீண்டும்  பணிக்கு எடுக்க வேண்டும் என தொழிலா ளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதர வாக சிஐடியு சார்பில் அந்த நிறுவனத்தின் அருகே புதனன்று (ஜூலை 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கே. விஜயன், செயலாளர் கே.ராஜேந்திரன் வழக்  கறிஞர் சுதர்சனம் ஆகியோர் பேசினர்.