சென்னை, ஜூலை 23 - சென்னையில் வட்டம் வாரியாக முகாம் நடத்தி நலவாரிய உறுப்பினர் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது.
பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம், ஆண் களுக்கு 60, பெண்களுக்கு 55 வயதி லிருந்து ஓய்வூதியம் தர வேண்டும், தீபாவளி பண்டிகை கால போனஸ் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்து எங்கு நடந்து இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் தர வேண்டும்,
கல்வி, திருமணம், ஓய்வூதியம், இறப்பு நிதி கோரும் விண்ணப்பங் களை அற்பக் காரணங்களை கூறி அலைகழிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூலை 16 அன்று மாநிலம் முழு வதும் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தி யது.
சென்னையில் டிஎம்எஸ் வளாகத் தில் உள்ள தொழிலாளர் நல ஆணை யர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையி னர் கைது செய்தனர். காவல்துறை யின் இந்த அராஜகத்தை கண்டித்து செவ்வாயன்று (ஜூலை 23) ராஜரத்தி னம் மைதானம் அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் ஜனநாயக உரிமை பறிப்புக்கு எதிராக போராட்டத்தில் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய தலைவர்கள், ஜனநாயக உரிமைகள் போராடி பெற்றவை. அதனை ஒருபோ தும் பறிபோக விடமாட்டோம். 3.20 கோடி மின் இணைப்புகளுக்கான தரவுகள் அழியவில்லை. மாநகராட்சிக்கு சொத்துவரி கட்ட வேண்டியவர்களின் தரவுகள் அழியவில்லை. ஆனால் நலவாரிய உறுப்பினர்கள் 72 லட்சம் பேரின் தரவுகள் அழிந்துவிட்டது என்பதை ஏற்க இயலாது. இதனை சரிசெய்ய தொழிலாளர் துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை. எனவே, சென்னையில் வட்டம் வாரியாக முகாம் நடத்தியும், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தியும் நலவாரிய பதிவை நடத்த வேண்டும் என்றனர்.
சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சி.திருவேட்டை (மத்தியசென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை) ஆகியோர் பேசினர். ஆட்டோ தொழி லாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.