tamilnadu

img

கிறிஸ்துமஸ் ஸ்டார் 

சரிதா ஜோ விமலா அன்று பள்ளியிலிருந்து வந்தவுடன் தன் தாத்தாவிடம் “தாத்தா நம் வீட்டில் ஸ்டார் கட்டலாமா?” என்று கேட்டாள். “என்ன ஸ்டரா? எதற்கு?” என்று கேட்டார். “அழகா இருக்கு தாத்தா. எனக்கு ஆசையா இருக்கு தாத்தா”  “அதெல்லாம் நம்ம வீட்டில் கட்டக்கூடாது”  “அதோ ராபர்ட் வீட்ல மட்டும் கட்டி இருக்காங்க”  “அவங்க கிறித்தவர்கள். அதனால் அவர்கள்வீட்டுக்கு முன்னாடி கட்டுவார்கள்” என்றார் தாத்தா. “தாத்தா கட்டலாம் தாத்தா. அழகா இருக்கு தாத்தா” என்று கெஞ்சி கேட்டுவிட்டு அழ ஆரம்பித்தாள்.  அதெல்லாம் வேண்டாம் இன்று கூறிக் கொண்டிருந்த நேரம் பக்கத்து வீட்டு சுரேஷ் அங்கு வந்தார்.  “என்ன மாமா, விமலா என்ன கேட்டு அழுகிறாள்? சின்ன பிள்ளை தானே வாங்கி கொடுத்துட வேண்டியதுதானே” என்றார் சுரேஷ். “நன்றாகக் கூறினாய் போ. அவள் என்ன கேட்டாள் தெரியுமா? அந்த ராபர்ட் வீட்டுக்கு முன்னால் கட்டியிருக்கும் ஸ்டார் மாதிரி நம்ம வீட்டில் கட்டலாமா என்று கேட்கிறாள்” என்றார் தாத்தா. “இதில் என்ன இருக்கிறது வாங்கிக் கட்ட வேண்டியது தானே மாமா” என்றார் சுரேஷ். “அது எப்படி கட்ட முடியும் நாம் என்ன கிறிஸ்டினா? என்னப்பா நீயும் புரியாம பேசுறியே. இவ்வளவு பேசுறியே, உங்கள் வீட்டில் நீ கட்டிவிடுவாயா?” என்றவுடன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் சுரேஷ். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விமலா “ஏன் கட்டினால் என்ன ஆகும் தாத்தா!” என்று கேட்டாள். “அதெல்லாம் உனக்குப் புரியாது” என்று கூறிவிட்டு தாத்தா உள்ளே சென்று விட்டார். ஒரு வாரமாக தொடர்ந்து விமலா வீட்டுக்கு வந்தவுடன் அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு நாள் இரவு தாத்தாவின் அருகில் படுத்துக் கொண்டு தாத்தாவை கதை கூறச் சொல்லி கேட்டாள். கதையில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் இங்கே நல்லது செய்தவர்களோட வீடு என்றார் தாத்தா. கதை கூறி முடித்தவுடன், “தாத்தா, அப்போ வானத்தில் இருக்கிற நட்சத்திரம் எல்லாம் ஒரு ஒருத்தரு வீடா” “ஆமா கண்ணு நட்சத்திரம் எல்லாம் ஒரே ஒருத்தர் வீடு தான்”  “அப்போ கிறிஸ்டியன்ஸ் மட்டும்தான் நல்லது செஞ்சவங்க இல்லயா தாத்தா” “ஏன் அப்படி கேட்கிறாய்?” “நீங்கதானே தாத்தா சொன்னீங்க. வானத்துல இருக்கிறவங்க எல்லாம் நல்லது பண்ணுவாங்க என்று. அப்போ நட்சத்திரம் இருந்தால் அவர்கள் கிறிஸ்டியனா தானே இருக்கணும்”  தாத்தாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  “ஜாதி மதம் எல்லாம் மனுஷங்களால் உருவாக்கப்பட்டது என்று எங்கள் ஸ்கூல்ல சொல்லி இருக்காங்க தாத்தா” என்று விமலா கூறியவுடன் குழந்தைகளுக்கு இருக்கிற தெளிவு கூட என்கிட்ட இல்லையே என்று நினைத்து விமலாவை வாரி அணைத்து கொண்டார். அடுத்த நாள் விமலா பள்ளியிலிருந்து வரும்பொழுது அவர்கள் வீட்டில் ஸ்டார் தூங்கிக் கொண்டிருந்தது.