சென்னை,டிச.24- ஈரோடு, நெல்லையில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெற் றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்கள் நடந்த நிலை யில், இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 1,640 திருமணங்கள் நடைபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்து அதிகாரிகள் திரு மணத்தை தடுத்து நிறுத்தும் சதவிகித மும் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 3,609 புகார்கள் கிடைத்த நிலையில், 70.2 சதவிகித திருமணங்களை அதி காரிகள் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், 2023இல் 3,049 புகார்கள் பெற்று 65.4 சதவிகிதமும் 2024இல் 3,544 புகார்கள் பெற்று 53.7 சதவிகி தமும் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. புகார்கள் பெறுவதில் தாமதம் காரணமாக தடுத்து நிறுத்து வதற்கான வாய்ப்புகள் குறைந்துள் ளன. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 150 குழந்தை திருமணங்களும், நெல்லை மாவட்டத் தில் 133 திருமணங்களும் நடைபெற் றுள்ளன. கடந்த ஆண்டு இரு மாவட்டங் களிலும் முறையே 62 மற்றும் 49 குழந்தை திருமணங்கள் பதிவான நிலையில், இந்த ஆண்டு இரு மடங்கு க்கு மேல் அதிகரித்துள்ளது.
அதிக அளவில் குழந்தை திரும ணங்கள் பதிவாகியுள்ள முதல் 10 மாவட்டங்களில் 6 மேற்கு மாவட்டங் கள் இடம் பெற்றுள்ளன. ஈரோடு தவிர, கோவை 90, நாமக்கல் 74, திருப்பூர் 66, தருமபுரி 58 மற்றும் சேலம் 51. டாப் 10 இடங்களில் நாமக்கல் இருந்தா லும், 2022 முதல் தொடர்ந்து எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பெரம்பலூர் 94, திண்டுக்கல் 77 மற்றும் திருப்பத்தூர் 66 உள்ளடக்கிய முதல் 10 மாவட்டங்கள் ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும், பெரம்பலூர், திருப்பத்தூர், கோவை, தருமபுரி, திருப்பூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங் களில் குழந்தை திருமணம் அதி கரித்துள்ளது. அரியலூரில் கடந்தா ண்டு 2 ஆக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 31 ஆக உயர்ந்துள்ளது