tamilnadu

img

சுற்றுலாத் துறையின் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, செப். 27- சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஓட்டலில் 4 கோடியே 17 லட்சத்து 10 ஆயி ரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில்  60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம் மற்றும் மதுரை, கோரிப்பாளை யத்தில் அமைந்துள்ள தர்காவில் 1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களின் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருச்சியில் கூட்டரங்கம்

ஆண்டுதோறும் திருச்சிக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில், தமிழ் நாடு ஓட்டலில் 4 கோடியே 17 லட்சத்து  10 ஆயிரம் ரூபாய் செலவில் சுமார் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 நபர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்  பட்டது.

கடலூரில் அலுவலகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல் களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கி ணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இவ் வலுவலகத்தின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

மதுரையில் கூடுதல் வசதிகள்

மதுரை மாநகர் கோரிப்பாளை யத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா  சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா  தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். இந்த தர்காவிற்கு வருகை புரியும் புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி களை ஏற்படுத்தித் தரும் வகையில் 1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக் கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வசதிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இவற்றை மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் இருந்து காணொ லிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன் மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

;