tamilnadu

img

உடல் உறுப்புகளை தானம் செய்ய முதலமைச்சர் பதிவு செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,செப்.24- சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடைபெற் றது. இந்த   நிகழ்ச்சியில் மருத் துவம் -மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கை யேடு மற்றும் ‘’மறுபிறவி’’ என்ற உடல் உறுப்பு தான விழிப்பு ணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணி
யாற்றிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையா ளர்கள் உருவாகி இருக்கிறார்கள். இருதய மாற்று அறுவைசிகிச்சைக்கு கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட இதயம் 892, நுரையீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீரகம் 3,544, கணையம் 42, சிறுகுடல் 15, வயிறு 1, கைகள் 7 என 7,207 முக்கிய உறுப்புகள் பயன்பாடு பெற்றிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு முதலிடம்

உடலுறுப்பு கொடையா ளர்களின் எண்ணிக்கை பெருகி வரும் சூழ்நிலையில் தொடர்ச்சியாக கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று  வருகிறது. சிறுநீரகம் வேண்டி காத்தி ருப்போர் 7,106 பேர், கல்லீரல் வேண்டி காத்திருப் போர் எண்ணிக்கை 416 பேர்,

இவற்றில், இதயத்திற்காக 83 பேர், நுரையீரல் வேண்டி காத்திருப்போர் 54 பேர், இதயம் மற்றும் நுரையீரல் வேண்டி காத்திருப்போர் 24  பேர், கணையம், கைகள், சிறு குடல், வயிறு, சிறுநீரகம், இத யம்  என 7,797 பேர் உடல் உறுப்பு வேண்டி காத்தி ருப்பவர்களாக உள்ளனர்.இவர்களுக்கு விடியல் என் னும் இணையதளம் தொடங்கி அதன் மூலம் ஒவ்வொருவரு க்கும் அவர்கள் பதிவு செய்தி ருக்கும் காலத்தை பொறுத்து, உடல் உறுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.