tamilnadu

img

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு முதல்வர் நினைவுப் பரிசு

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் பூரணசுந்தரி, பாலநாகேந்திரன்  ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 பேரை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக் கான ஜீவன் ரக்சா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.கலை பண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கான கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.கலை பண்பாட்டுத் துறையின் https://www.artandculture.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் கலைஞர் களுக்கான தனி இணைய வாயிலை துவக்கி வைத்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் குறித்த அறிக் கையை வெளியிட்டார்.

;