சென்னை, செப்.1- சுதந்திரப் போராட்ட வீரர் புலித் தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித் தேவரின் 309-வது பிறந்தநாள்! மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவ ரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்! என்று கூறியுள்ளார்.