tamilnadu

img

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து முதலிடம்

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து முதலிடம்

சிதம்பரம், மே 8- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் நகரில் முதலிடம் பெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 215 மாணவர்களில் 214 பேர் தேர்வு பெற்று 99.99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். இதில்  மாணவி வி.அபிராமி 594 மதிப்பெண்ணும், ஏ.கிருத்திகா 584 பெற்று பள்ளி இரண்டாம் இடமும், 582 மதிப்பெண்கள் பெற்று எம். வித்யாலட்சுமி  மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் 23 மாணவர்கள் 100-க்கு 100  மதிப்பெண்களும்,575 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேர், 550க்கு மேல் 40 பேர், 500க்கு மேல் 30 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி அபிராமிக்கு பள்ளி தாளாளர் வீனஸ்.குமார் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு, ஊக்கத்தொகையாக ரூ 10 ஆயிரம்  வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி, துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.