tamilnadu

img

கார் கவிழ்ந்து சென்னை மாணவி உயிரிழப்பு

வேலூர். ஜூன் 23 - சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவி கள் 4 பேர் ஏலகிரிமலைக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி ஞாயிறன்று (ஜூன் 23) 4 பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் விமான நிலையம் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் பாய்ந்து லாரி மீது மோதியது.

இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி யது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 மாண வர்கள், 2 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்தது வந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்த வர்களை மீட்டு வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு  சிகிச்சை பலனின்றி ஒரு மாணவி உயி ரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் சென்னையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகள் அஸ்வதி(21) என்பது தெரிய வந்தது. மேலும் படு காயமடைந்தவர்கள் சென்னையை சேர்ந்த மாணவி சக்தி (21), மாணவர்கள் விஷ்ணு (19), டிராவிட்(21) என்பதும், இறந்த அஸ்வதி உட்பட அனைவரும் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.இதுகுறித்து விரிஞ்சி புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.