சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை நகராட்சி நிர்வா கம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:
“தஞ்சாவூர், திருச்சி மாநகராட்சியில் ரூ. 346.80 கோடி செலவில் புதிதாக சந்தைகள் அமைக்கப்படும். பண்ருட்டி, கொல்லங்கோடு, பள்ளப்பட்டி ஆகிய நகராட்சிகளில் ஏற்கனவே உள்ள சந்தைகள் மேம்படுத்தப்படும்.
சாலை சீரமைப்பு
ஓசூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாநகராட்சி, திருச்செங் கோடு, கொல்லங்கோடு, சோளிங்கர், கம்பம் ஆகிய நகராட்சிகளில் புதிதாக பேருந்து நிலையங்கள் அமைக்கப் படும். மதுராந்தகம், எடப்பாடி, குளச்சல், வடலூர், கோவில்பட்டி, மானாமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிதம்பரம், பண்ருட்டி, அதிராமபட்டினம், திருப்பத்தூர், வாணி யம்பாடி, பெரம்பலூர், திருவண்ணா மலை, பள்ளப்பட்டி ஆகிய நகராட்சி பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் சேதம டைந்த 2,016 கி.மீ. சாலைகள் சீர மைக்கப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை, குடி நீர் திட்டப் பணிகள் செய்து கொடுக்கப்படும்.
சாலைகள் தரம் உயர்வு
ரூ. 360 கோடியில் கசடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக் கப்படும். 12 நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப் படும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் 418 கி.மீ நீள மண் சாலைகள், தார் சாலைகள், கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159 ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப் படும்
சென்னை ரிப்பன் மாளிகை விரிவாக்கம்
சென்னை மாநகரில் தற்போது 89 லட்சம் பேர் வசிக்கின்றனர். வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்ற னர். எனவே, சென்னையில் வார்டு களை அதிகப்படுத்தி மக்கள் பிரதிநிதி களின் எண்ணிக்கையை அதிகப்படுத் தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ. 74 கோடி செலவில் புதியதாக மாமன்றக் கூடம் கட்டப்படும்.
சர்வதேச தரத்தில் அண்ணா நகர் டவர்
சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
சென்னையில் மழைநீர் தேங்க காரணம்
தெருநாய் பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற் கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். சென்னை மாநகரில் மழைக்காலங்களில் நீர் தேங்குவதற்கு மெட்ரோ திட்டப் பணிகளே காரணம்.
சென்னை போன்ற பெருநகரங்க ளின் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரி வதைத் தடுக்கச் சட்டம் கொண்டு வரப் படும். மாடுகள் முதன்முறை பிடிபட்டால் ரூ. 5,000, 2-ம் முறை பிடிபட்டால் ரூ. 10,000, 3-ம் முறை பிடிபட்டால் ஏலம் விடும்படி சட்டம் கொண்டு வரப்படும். இவ் வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.