சென்னை, பிப். 1 - ‘தேசத்தை, கல்வியைப் பாது காக்க பாஜகவை நிராகரிப்போம்!’ என்று சென்னையில் நடைபெற்ற பேரணியில் மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் சூளுரைத்தனர்.
யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் “கல்வியை பாது காப்போம், புதிய கல்விக் கொள்கை யை நிராகரிப்போம்; இந்தியாவைப் பாதுகாப்போம், பாஜக-வை நிராகரிப் போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, வியாழனன்று (பிப்.1) சென் னையில் 16 மாணவர் அமைப்புகளின் சார்பில் பேரணி- பொதுக்கூட்டம் நடை பெற்றது.
உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ராயபுரம் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி மைதானம் அருகே தொடங்கிய பேரணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ராபின்சன் பூங்கா வரை நடைபெற்ற பேரணியில், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு, பாஜக-வின் மதவாத அரசியலுக்கு எதிராகவும், கல்வியை காவிமயமாக்கும் முயற்சியை கண்டி த்தும் முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியின் நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாணவர் அணி தலைவர் சி.வி.எம்.பி. எழிலன் தலைமை வகித்தார். தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்திய மாணவர் சங் கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி. ஷானு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சர் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி
கோ. அரவிந்தசாமி (இந்திய மாண வர் சங்கம்), தினேஷ் (ஏஐஒய்எப்), லேகா (ஏஐஎஸ்ஏ), பிரியங்கா (சிஆர் ஜெடி), சபியுல்லா (பிஎஸ்யூ), சுரேஷ் பாபு (சிஒய்எஸ்எஸ்), செஞ்சுடர் (ஆர் எஸ்எப்), செந்தூர்பாண்டி (டிஎஸ்எப்), அப்துல் அஜிஸ் (எஸ்எம்ஐ), எஸ். பிரின் ஸ் என்னரெஸ் பெரியார் (திராவிடர் கழ கம்), சின்னதம்பி (என்எஸ்யூஐ) ஆகி யோர் உரையாற்றினர்.
இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மையூக் பிஸ்வாஸ், இணைச்செயலாளர் தீப் ஷிதா, மத்தியக்குழு உறுப்பினர்கள் சி. மிருதுளா, க. பிருந்தா, மாநிலத் தலை வர் சம்சீர் அகமது மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில ங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
“தேசத்தை பாதுகாப்போம், பாஜக வை நிராகரிப்போம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆயி ரக்கணக்கான மாணவர்கள் உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர்.