சென்னை, செப். 12- சென்னை கேரள சமாஜத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஓணம் சந்தை நடைபெற்றது. இதன் நிறைவுநாளான புதனன்று (செப்.11) ஓணம் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அத்தப் பூக்களால் கோலமிட்டு துவங்கிய விழாவில் திரைப்பட பாடகி வாணிஜெயராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மெட்ராஸ் கேரளசமாஜம் தலைவர் டாக்டர்.ஏ.வி.அனுப், சமாஜம் தலைவர் பி.கே.என்.பணிக்கர், சேர்மன் சிவதாசன் பிள்ளை, அறக்கட்டளை தலைவர் டி.அனந்தன், பொதுச்செய லாளர் பி.கே.பால கிருஷ்ணன், அமைப்பாள ர்கள் எம்.கே.ஏ.அஜீஸ், கே.சசிதரன், எஸ்.சுபாஷ்பாபு, கும்பளங்காடு உண்ணிக்கிருஷ்ணன், கே.கே.சசீதரன், சிவதாசன், சிஜூசனல்குமார், ரமேஷ், வி.மோகன், கே.ஆர்.கோபகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், விழாவில் கேரள கலாச்சாரத்தை பறை சாற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பேச்சுப்போ ட்டி, கவிதைப்போட்டி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும், கல்வி உதவித்தொகையும் வழங்க ப்பட்டன.