tamilnadu

img

சென்னை ஐஐடி-யில் மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடியில் பி.டெக் 2-ஆம் ஆண்டு படித்துவந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி திகழ்கிறது. ஆனால், மன உளைச்சல் மற்றும் சாதிய பாகுபாடு ஆகிய காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக ஐஐடி மாணவர்களின் தற்கொலை செய்திகள் அதிகரித்துக் காணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாநிலங்களவையில் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்ற 2-ஆம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவர், தனது விடுதி அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும், இது சென்னை ஐஐடி-யில் நடந்த 4-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

;