tamilnadu

img

விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை,:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய பேச்சுக்கள் அவதூறானவை தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்களன்று(ஜன.20) விசாரணைக்கு வந்தது. 
அப்போது, மனுவை திரும்பப் பெற விஜயகாந்த் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்பது நீதிமன் நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபாரதம் விதிக்கலாம் என்றனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது என்று எச்சரித்து, மனுவை வாபஸ் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

;