tamilnadu

img

சென்னை : அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து 

சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் 4ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி கட்டிடத்தின்  4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த அலுவலகம், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்குரியது என தகவல் தெரிவிக்கின்றது.