tamilnadu

சென்னை: 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

சென்னை, மே 23- சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளை உள்ளடக்கி 15 மண்டலங்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக உள்ளது.  அதிகபட்சமாக ராயபுரத்தில் ஆயிரத்து 768 பேருக்கும், கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 300 பேருக்கும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 79 பேருக்கும், தேனாம்பேட்டையில் ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 594 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.