tamilnadu

சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ மாறிய நாள்!

 சென்னை,ஜூலை 18- சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி 76  நாட்கள் உண்ணாநிலை இருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார் தியாகி சங்கரலிங்கனார். அவரது உயிர்த்தியாகத்தால் 1967 ஆம் ஆண்டு  ஜூலை 18 தேதி ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு  அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் அண்ணா கொண்டு வந்தார். ஒருமனதாக நிறைவேறியதாக அன்றைய பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், சட்டமன்றமே அதிரும் வகையில் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘தமிழ்நாடு’ என  மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பி னர்களும் ‘வாழ்க’ என குரல் எழுப்ப, சட்டமன்றமே  உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தியது. இந்த நாளை சட்டமன்றத்தில் ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை நினைவுப்படுத்தினார்.