சென்னை,பிப்.23- கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப் பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பதிவானது. இப்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. இருப்பினும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில் திங்களன்று(பிப்.24) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில், பொதுவாக, வறண்ட வானிலையே நிலவினாலும், அவ்வப்போது, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.