tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!  

சென்னை, டிச. 2 - பெஞ்சால் புயல் திங்கட்கிழமையன்று காலை மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடதமிழக உள் பகுதி களில் நிலவுகிறது. இதன் காரணமாக, செவ்வாயன்று (டிச.2) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

எச். ராஜாவுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை!

சென்னை, டிச. 2 - வாய்க்கொழுப்பாக பேசுவதையே வாடிக்கை யாக கொண்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா 6  மாதங்கள் என ஒரு ஆண்டு  சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

எச்.ராஜா மீது மொத்தம் 11 வழக்குகள் வரை உள்ள நிலையில் இதில் பெரியார் சிலையை உடைப்பேன் என்ற வழக்கி லும், கனிமொழி குறித்து அவ தூறாக பதிவிட்ட வழக்கு களிலும், தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் திங்க ளன்று தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரம், எச். ராஜா  மேல்முறையீடு செய்வதற் காக, தண்டனையை டிசம்பர் 31 வரை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.