tamilnadu

img

“நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்” – தமிழக அரசு அரசாணை  

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாயவிலைக் கடையில் சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

நியாயவிலைக் கடைகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேழ்வரகு, கம்பு, ராகி, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.  

அதனடிப்படையில் முதற்கட்டமாக சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், சிறு தானியங்களின் மதிப்பைக் கூட்டவும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

;