புதுச்சேரியில் மத்திய தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, மே 20- ஒன்றிய பாஜக அரசின் புதிய தொழிலாளர் நல சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பு சாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர் முறைக்கு முடிவு கட்ட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சிலை அருகில் சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சேது செல்வம், சீனிவாசன்,ஞானசேகரன், அண்ணா அடைக்கலம்,புருஷோத்தமன், செந்தில், வேதா வேணுகோபால், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.