tamilnadu

img

சிறு,குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் விரைந்து கடன் பெற மத்திய மையம்

சென்னை,ஆக.27 சிறுகுறு நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்க ளுக்கு விரைவாக கடன் வழங்க இந்தியன் வங்கி சிறப்பு மையத்தை சென்னையில் திறந்துள்ளது. இந்த மையங்களில் அந்த நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்கள் விரைவாக ஆய்வு செய்யப்படும் என்று  இதனை தொடங்கிவைத்து  வங்கியின்  மேலாண் இயக்கு நரும் தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்தரு கூறினார். இதனால் எம்எஸ்எம்இ கடன் விண்ணப்பங்கள் தேங்காத வண்ணம் விரைவாக பரி சீலிக்கப்பட்டு கடன்களு க்கு அனுமதி வழங்கப்ப டும் என்றும் அவர்கூறினார். சென்னை தென் மண்ட லத்தில் 72 கிளைகளில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் இந்த மையத்தில் பரிசீலிக்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் கே.சந்திர ரெட்டி (பொதுமேலாளர்-நிதி) கே.எஸ்.சுதாகர் ராவ் (தலைவர்-எம்எஸ்எம்இ) பி.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு மண்டல மேலாளர்) மற்றும் வங்கி யின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.