கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் 3 மாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பிக் புதுவை பிரதேசம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதகடிப்பட்டில் தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கலிதீர்த்தால்குப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைத்தலைவர் கலிவரதனும், திருவாண்டார்கோயிலில் துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.