தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுமையங்கள் ஆந்திராவின் உட்பகுதியில் பல நூறு கி.மீ தள்ளி ஒதுக்கபட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டிருப்பதாக பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது