சென்னை, ஆக.21- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வா கக்குழு உறுப்பின ரும், நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினரு மான எம்.செல்வராசு மீது நடைபெற்றுள்ள தாக்கு தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற பிறகு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் எம்.செல்வராஜ் சென்று வருகின்றார். அதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் தொகுதியில் ஆக. 20 அன்று நன்றி தெரி வித்து வந்த நிலையில், வேதாரண்யம் தொகுதி கோடியங்கரை, அகஸ்தியாம் பள்ளி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் (திமுக) இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் தோழமை கட்சி தலை வர்களும், தொண்டர்களும் உடன் சென்றுள்ளனர். அகஸ்தியாம் பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் நன்றி தெரிவித்து எம்.செல்வராஜ் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி கத்தி வீசப்பட்டுள்ளது. வீசப்பட்ட கத்தி அவர் மீது பாயாமல் ஜீப்பில் மோதி விழுந்து ள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயற்குழு விடுத்தி ருக்கும் அறிக்கையில், செல்வராசு மீது கத்தியை வீசியவர் யார்? எதற்காக? இப்படியொரு கொலை வெறி தாக்குதலுக்கு முற்பட்டார். அதற்கான காரணமென்ன? அதன் பின்னணி என்ன? யாருடைய தூண்டுதலுக்கு அந்த நபர் இதுபோன்று ஈடுபட்டார் என்பதனை காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எம்.செல்வராசுக்கு மட்டு மல்ல, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலை வர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மாநில அரசையும், காவல்துறை யையும் கேண்டுக்கொண்டு ள்ளது.