சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்து
சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
வடபழனியில் 13 வயது சிறுவன் சட்ட விரோதமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கிய பாதசாரி முதியவரும், ஆட்டோ ஓட்டு நரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சாலிகிராமம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் மகாலிங்கம் (69) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். சிறுவனுக்கு கார் ஓட்ட அனுமதி கொடுத்த அவரது தந்தை மீது மோட்டார் வாகன சட்டம் உள்பட மூன்று சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் எச்சரித்து அனுப்பப்பட்டார்.இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் வியாழனன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்படுதல் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீ சார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற ஒரு சட்டப் பிரிவின் கீழும் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.