tamilnadu

img

புற்றுநோயை வெல்ல முடியும் அரசு மருத்துவமனையில் உறுதியேற்பு

சென்னை, பிப். 4- உலக புற்றுநோய் தினத்தையொட்டி செவ் வாயன்று (பிப். 4) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் வர் மருத்துவர் ஜெயந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பும், பேரணியும் நடை பெற்றது. இதுகுறித்து ஜெயந்தி கூறியதாவது:- புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். புற்று நோய் பற்றிய தேவையான அறிவையும் விழிப்புணர்வை யும் வளர்த்துக் கொண்டால் உலகில் 30 விழுக்காடு புற்று நோயை தடுத்து விட முடி யும் என்பதுதான் உண்மை.  புகைப்பிடித்தல், குடிப் பழக்கம், துரித உணவுப் பழக்கம், உடற்பயிற் சியின்மை, உடல் பருமன் போன்றவற்றால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிக மாகும்.  2020ஆம் ஆண்டின் முழக்கம் “என்னால் முடி யும் மற்றும் நான் செய்வேன்” என்பதாகும். நாம் அனை வரும் தங்களால் ஆனா முயற்சிகளை மேற்கொண்டு புற்றுநோயை வெல்வோம். தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன சிகிச்சை முறைகள் அரசு மருத்துவ மனைகளில் கிடைப்பதால், புற்றுநோயை ஆரம்ப நிலை யில் கண்டறிந்து, முற்றிலும் குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.