தமிழகத்தில் 5,8ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், இடைநிற்றல் அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் 5, 8- ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என தெரிவித்து உள்ளார்.