தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையம் அருகில் உள்ள பூச்சியத்திப்பேடு பஜாரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.ரவி தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கங்காதரன், கே.ரமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
************
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊரப்பாக்கம் கிளை சார்பில் 15 இடங்களில் கிளைச் செயலாளர் மணிவேல் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். பகுதிச் செயலாளர் சேஷாத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
************
தேசிய கல்வி பாதுகாப்பு கொள்கையை திரும்பப்பெறக் கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடசென்னை மாவட்டம் முழுவதும் பிரச்சார கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக எழும்பூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் துவக்கிவைத்தார். இதில் பகுதிச் செயலாளர் கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
************
தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பத்தூர் வட்டவடிவ நகரில் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக மாநிலத் தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
************