சென்னை, ஏப். 22- கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரை களை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கி வருகிறது. இக்குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதனன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கணொலி காட்சி மூலமாக பேசினார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர், உரிய பாதுகாப்புடன் சிகிச்சை களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிறகு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதமும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.அதற்கான டோக்கன் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் பொருள் வாங்க ரேஷன் கடைகளுக்கு வரவேண்டும் என்று குறிப்பு எழுதிக் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது