tamilnadu

தீவைப்பு-குளறுபடி: இன்று மறுவாக்குப்பதிவு

 சென்னை,டிச.29- முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு மற்றும் வாக்குச் சீட்டில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் சில இடங்களில் திங்களன்று(டிச.30)மறுவாக்குப்பதிவுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் நாளை மறுவாக்குப்பதிவு நடை பெறுகிறது. தூத்துக்குடியில் நெடுங்குளம் ஊராட்சியின் 1-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.நாகை சீர்காழி அருகே கூழையூர் கிராமத்தில் இருபதாவது வார்டு உறுப்பினர் பதவிக்குக்கும், புதுக்கோட்டையில் விராலிமலை பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும். தஞ்சையில் செம்மங்குடி ஊராட்சி யில் 8 மற்றும் 9 வது வார்டுகளிலும், மதுரையில் கொட்டாம்பட்டி ஊராட்சி யில் சென்னகரம்பட்டி கிராமம் எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம் 21ஆம் வார்டில் மறுவாக்குப்ப திவு நடைபெறுகிறது.

;